பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு குளுக்கோஸ் ஏற்ற ரூ.200 லஞ்சம் வாங்கியதாக வாலிபர் கூறிய புகாரால் வேல்முருகன் எம்.எல்.ஏ. அதிர்ச்சி அடைந்தார்.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், பண்ருட்டி தொகுதி
எம்.எல்.ஏவுமான வேல்முருகன் நேற்று மதியம் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் திடீரென அய்வு செய்தார். வார்டு, வார்டாக சென்ற அவர், அங்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பெண் நோயாளி ஒருவரை அழைத்து வந்திருந்த காடாம்புலியூர் பெரியபுறங்கணியை சேர்ந்த சுரேஷ் (வயது 30) என்பவர் வேல்முருகன் எம்.எல்.ஏ.விடம் ஓடிவந்து பரபரப்பு புகாரை கூறினார்.
அப்போது அவர் கூறுகையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எனது உறவினரை சிகிச்சைக்காக அழைத்து வந்தேன். உடனடியாக குளுக்கோஸ் ஏற்ற டாக்டர் அறிவுறுத்தினார். அதன்படி குளுக்கோஸ் ஏற்றும் வார்டுக்கு அவரை அழைத்து வந்தேன். அங்கிருந்த பெண் ஊழியர், ரூ.200 கொடுத்தால்தான் குளுக்கோஸ் ஏற்றுவேன் என்று கூறினார். இதனால் சில மணி நேரம் நான் தயங்கி நின்றேன். அதன்பிறகு வேறுவழியின்றி லஞ்சமாக ரூ.200 கொடுத்தேன். பணம் கொடுத்த பிறகே குளுக்கோஸ் ஏற்றினார்கள். இதேபோல் ஊசி போடுவதற்கும், சில சிகிச்சைகளுக்கும் பணம் வாங்குகிறார்கள். ஏழை, எளிய மக்கள்தான் அரசு ஆஸ்பத்திரியை தேடி வருகிறோம். இங்கேயும் பணம் கேட்டால் நாங்கள் என்ன செய்வது. இது போன்று பணம் வாங்குவதை நீங்கள்தான் தடுக்க வேண்டும் என்றார்.
இந்த புகாரை கேட்டதும் வேல்முருகன் எம்.எல்.ஏ. மற்றும் அவருடன் வந்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக தலைமை மருத்துவர் மாலினியை அழைத்து வேல்முருகன் எம்.எல்.ஏ. கேட்டார். அப்போது வேல்முருகன் எம்.எல்.ஏ. கூறுகையில், பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற வரும் நோயாளிகளிடம் மருத்துவ ஊழியர்கள் பணம் வாங்குவதாக ஏற்கனவே என்னிடம் புகார் வந்தது. அதன் அடிப்படையில்தான் இங்கு ஆய்வு செய்ய வந்தேன். இப்போது இந்த வாலிபரின் புகாரால் அது உண்மை என்று தெரிந்துள்ளது. இனிமேல் யாரும் நோயாளிகளிடம் பணம் வாங்கக்கூடாது. வரும் காலங்களில் இதுபோன்று புகார் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்றார்.
அதற்கு தலைமை மருத்துவர் மாலினி, இங்கு யாரும் நோயாளிகளிடம் பணம் வாங்குவதில்லை. அப்படி யாரேனும் வாங்கி இருந்தால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
- மாரடைப்பு… வகுப்பறையிலேயே உயிரிழந்த 11ம் வகுப்பு மாணவிமத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் 11-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு மாரடைப்பு ஏற்பட்டு வகுப்பறையிலேயே உயிரிழந்த […]
- நாகர்கோவில்- நாகராஜா கோவிலில் தைப்பெருந்திருவிழா கொடியேற்றம்கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிரசதிபெற்ற நாகராஜா கோவிலில் தைப்பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது .கன்னியாகுமரி மாவட்டம் […]
- பேருந்தில் அபாயகரமான பயணம்… பள்ளி மாணவர்கள் சாகசம்..!!நீலகிரி மாவட்டம் பள்ளி மாணவகள் அபாயகரமான பயணம் மேற்கொள்கின்றனர்கூடுதல் பேருந்து இயக்க பொதுமக்கள்கோரிக்கைநீலகிரி மாவட்டம் கூடலூர் […]
- மாணவ மாணவிகளுக்கு உடல்நல குறைவு -விஜய் வசந்த எம்பி.ஆறுதல்கன்னியாகுமிரியில் என்.எஸ்.எஸ் முகாமில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகள் உடல் நலக்குறைவு விஜய்வசந்த எம்.பி. நேரில் பார்வையிட்டு […]
- மஞ்சூர் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மோல் பஜார் இன்கோ தேயிலை தொழிற்சாலை அருகில் அமைந்துள்ள பழமை வாய்ந்த […]
- பிப். 3ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு…ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2க்கான தேர்வு பிப்ரவரி 3ம் தேதி தொடங்கி பிப்ரவரி 14ம் […]
- நீலகிரி அருகே கிணற்றில் விழுந்து சிறுத்தை உயிரிழப்புநீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஏலமன்னா அருகே கிணற்றில் விழுந்த சிறுத்தை உயிரிழந்தது. வனத்துறையினர் இது […]
- என் இனிய தனிமையே முதல் பாடல் வெளியீடுவளர்ந்து வரும் நடிகர் ஸ்ரீபதி, சகு பாண்டியன் இயக்கத்தில் ஜேம்ஸ் வசந்த் இசையில் உருவாகும் “என் […]
- கெவி படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட யோகிபாபு, கலையரசன்ஆத்யக் புரடக்சன்ஸ் சார்பில் கௌதம் சொக்கலிங்கம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கெவி’. தமிழ் தயாளன் இந்தப் […]
- வித்தியாசமான கோணத்தில் உருவாகியுள்ள ‘குடிமகான்’சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜய் சிவன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குடிமகான்’. நாளைய இயக்குநர் […]
- தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் லெட்ஸ் கெட் மேரீட் படத்தின் தொடக்க விழாதோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட் ) எனும் திரைப்படத்தின் […]
- பர்னிங் ஸ்டார் அறிமுகமாகும் தமிழ் படம்சம்பூர்ணேஷ் பாபு. தெலுங்கு படவுலக கதாநாயகர். இவரை அங்கே ‘பர்னிங் ஸ்டார்’ என்று அழைப்பார்கள். இவரை […]
- மஞ்சூரில் பள்ளி மாணவர்களைக் கொண்டு அடிக்கல் நாட்டு விழாபுதிய வகுப்பறைகள் கட்ட பள்ளி மாணவர்களைக் கொண்டு அடிக்கல் நாட்டு விழா பெற்றோர் ஆசிரியர் கழகம் […]
- மோடியின் ஆவணப்படம் பார்த்த மாணவர்கள்- போலீசார் இடையே தகராறு-வீடியோடெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போலீசார் இடையே தகராறு ஏற்பட்டதையடுத்து தள்ளுமுள்ளு நிலவி வருகிறது.டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் […]
- ஓ.பி.எஸ். அணியில் எல்லோரும் ஒன்று திரண்டால்…எடப்பாடியை அநாதை ஆக்கலாம்..? உ. தனிஅரசு பேட்டிஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க. ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு அளிப்பதாக கூறி அவரை […]