ராணி எலிசபெத்துடனான தனது நினைவுகளை நடிகர் கமல் பகிர்ந்துள்ளார். மறைந்த பிரட்டன் ராணி எலிசபெத் உடனான தனது நினைவுகளை நடிகர் கமல் டிவிட்டில் வெளியிட்டுள்ளார். “25 ஆண்டுகளுக்கு முன்னர் எங்களது அழைப்பை ஏற்று மருதநாயகம் திரைப்படத்தின் தொடக்கவிழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினார். அனேகமாக அவர் கலந்து கொண்ட ஓரே திரைப்படபடப்பிடிப்பு அதுதான். 5 ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில் நடந்த கலாச்சார நிகழ்வில் அரண்மனையில் அவரை சந்தித்துப் பேசியது இன்னமும் பசுமையாக நினைவிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.