டெண்டர் முறைகேடு வழக்கில் எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயிர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் சாலை சீரமைப்பு, மழைநீர் வடிகால் அமைக்க டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு என வழக்கு.முறைகேடு தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கலாம்- தமிழக அரசுக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
2018, 2019ஆம் ஆண்டுகளில் சாலைகள் சீரமைக்க ரூ. 300 கோடி மதிப்பிலும், மழை நீர் வடிகால் கட்டமைப்புகளுக்கு ரூ. 290 கோடி மதிப்பிலும், 37 டெண்டர்கள் ஒதுக்கீடு.டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடைபெற்றதாக, அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதி மன்றம் நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கியுள்ளது.