• Wed. Apr 24th, 2024

பஞ்சாப்பில் ஆட்சியை பிடிக்கிறது ஆம் ஆத்மி..!

உ.பி உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் , பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 86 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து உள்ளது. பெருபான்மைக்கு 59 இடங்கள் தேவையான நிலையில் 86 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகிக்கிறது. டெல்லியை தொடர்ந்து பஞ்சாபிலும் ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்கிறது.

பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 16 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *