சேலத்தை தலைமையிடமாக கொண்ட விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் பிளஸ் டூ பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவியர் மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சியானது,மதுரை குலமங்கலம் பகுதியில் இருக்கக்கூடிய சிஇஓஏ பள்ளியின் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மதுரை மேலூர் கோட்ட வருவாய் அலுவலர் டாக்டர் கே.பர்தொஸ் பாத்திமா(DR.K.FIRTHOUSE FATHIMA) பங்கேற்று மாணவ மாணவி மத்தியில் ஊக்குவிக்கும் வகையில் உரையாற்றினார்.
இது மட்டுமல்லாமல் இந்த நிகழ்வில் விநாயக மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் சிஇஓஏ பள்ளியின் சேர்மன் பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்கள்.
இந்த நிகழ்வில் தமிழக முழுவதும் 20 பள்ளிகளைச் சேர்ந்த 300க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.