காய்கறி வியாபாரிகளிடமிருந்து கூடுதல் வாடகை கேட்கும் மதுரை மாநகராட்சியின் சட்ட மீறலை கண்டித்து வரும் 7ஆம் தேதி மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தை வியாபாரிகள் முழு கடையடைப்பு போராட்டம் – ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள் பங்கேற்பு.
மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்கெட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டுவருகின்றன.
ஆந்திரா, மகாராஷ்ட்ரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரம் டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு இங்கிருந்து மதுரை மட்டுமின்றி ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சில்லறை வியாபாரிகளும், பொதுமக்களும் காய்கறிகள் வாங்கிசெல்கின்றனர்.
இந்நிலையில் மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு மாநகராட்சி சார்பில் வாடகை வசூலிக்கப்படுகிறது. கடந்த 2010ஆம் ஆண்டு கடை ஒன்றுக்கு மாதம்தோறும் 2ஆயிரம் ரூபாய் வாடகை வசூலிக்கப்பட்ட நிலையில் 2018ஆம் ஆண்டு 5054ரூபாயாக உயர்த்தப்பட்டது. தற்போது 6828ரூபாய் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா காலத்தில் உயர்த்தி அறிவித்த 36 மாத வாடகை நிலுவைத் தொகையை ரத்து செய்ய வேண்டும், மதுரை உயர்நீதிமன்ற கிளை வழங்கிய உத்தரவுபடி கடந்த 2016 முதல் 2017 வரை உயர்த்திய 14 மாத வாடகை நிலுவைத் தொகையை ரத்து செய்ய வேண்டும்.
புதிதாக அமல்படுத்திய நிலுவைத் தொகை, வாடகைக்கு விதிக்கப்படும் அபராத வட்டியை ரத்து செய்ய வேண்டும், வாடகைக்கு விதிக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரிலிருந்து விலக்கு அளிக்கு வேண்டும், மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவுபடி வியாபாரிகளை அழைத்து பேசி வாடகையை நிர்ணயம் செய்ய வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் நாளை 7ஆம் தேதி முழுநேர கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வியாபாரிகள் சங்கத்தினர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இதன் மூலமாக மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டிற்கு வரக்கூடிய ஆயிரம் டன் காய்கறிகள் வரத்து தடைபடும் எனவும், போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள் பங்கேற்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் சந்தை முழுவதிலும் எந்தவித அடிப்படை வசதியின்றி இருப்பதோடு, மாடுகள் தொல்லை அதிகமாக இருப்பதாக கூறியும் மாநகராட்சி கண்டுகொள்ளாத நிலையில் இது போன்ற கடையடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளதாக கூறினர்.
இதில் தக்காளி & சீமைக்காய்கறி வியாபாரிகள் சங்கம், மதுரை வாழை இலை கமிஷன் மண்டி உரிமையாளர்கள் சங்கம் ஒருங்கிணைந்த காய்கறி வணிக வளாக வியாபாரிகள் நலச்சங்கம் , தக்காளி காய்கனி அழுகும் மாத வாடகை நலச்சங்கம் உள்ளிட்டோரும் பங்கேற்கவுள்ளனர்.
- சிந்தனை கருத்தாளர் விருது பெற்ற மதுரை மாணவிக்கு பாராட்டு விழாமதுரை அருகே சோழவந்தான் தனியார் பள்ளியில் படிக்கும் பிளஸ் டூ மாணவி சர்வதேச சிந்தனை கருத்தாளர் […]
- நீலகிரி – கூடலூரில் அரசு பதுமான கடை உடைத்து திருட்டுநீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து காலமூலா செல்லும் வழியில் இரண்டு அடுத்தடுத்து மதுபான கடைகள் உள்ளது […]
- தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் உயிரிழப்பு….சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் அரசு மருத்துவமனையில் […]
- மதுரையில் ஒரே வாரத்தில் ஒரே பகுதியில் 2 கொலையால் பொதுமக்கள் அதிர்ச்சிமதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள தென்பரங்குன்றம் பகுதியில் நேற்று முன்தினம் தைபூசம் மற்றும் தைபௌர்ணமியை […]
- சிப்ஸ் பாக்கெட்டை இணைந்து திருடும் நாயும் குரங்கும் : வைரல் வீடியோ..!கடைக்கு வெளியே தொங்கவிடப்பட்டுள்ள சிப்ஸ் பாக்கெட்டுகளை நாயின் முதுகில் ஏறிக்கொண்டு குரங்கு திருடும் காட்சி இணையதளத்தில் […]
- குரைப்பவர்கள் கடிக்க மாட்டார்கள் பதான் படத்துக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ்ராஜ்திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மலையாள ஊடகமான மாத்ருபூமி சர்வதேச விழாவில் கலந்து கொண்ட நடிகர்பிரகாஷ் ராஜ், பதான் […]
- அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசு வேட்புமனு தாக்கல்ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாளான இன்று அதிமுக வேட்பாளர் தென்னரசு வேட்புமனு […]
- மீண்டது… நமது அரசியல் டுடே வார இதழ் 11.02.2023
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 110: பிரசம் கலந்த வெண் சுவைத் தீம்பால்விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை […]
- பொது அறிவு வினா விடைகள்
- சம்யுக்தாமேனனை
நெகிழ வைத்த மதுரைநாயகி சம்யுக்தா வாத்தி படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டபோது, “ தயவுசெய்து சம்யுக்தா […] - கிராமி விருது விழாவில் பாரம்பரியத்துக்கு பெருமை சேர்த்த இந்தியப் பெண்..!அமெரிக்காவில் நடைபெற்ற கிராமி விருது வழங்கும் விழாவில் இந்திய இசைக் கலைஞர் அனெட்பிலிப் காஞ்சிபுரம் பட்டுடுத்தி […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் வாழ்க்கைச் சக்கரத்தில் துன்பம் என்ற துரு பிடிக்கத்தான் செய்யும்.அது சக்கரத்தை உருளச் செய்யும் பொருட்டு […]
- குறள் 375நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்நல்லவாம் செல்வம் செயற்கு.பொருள் (மு.வ):செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு ஊழ்வகையால் நல்லவை எல்லாம் […]
- மாணவர்களுக்கு அறிவுரை சொன்ன நடிகை நயன்தாராநயன்தாரா ‘இறைவன்’ படத்தில் ஜெயம் ரவி ஜோடியாகவும் ‘ஜவான்’ இந்தி படத்தில் ஷாருக்கானுடனும் நடித்து வருகிறார். […]