நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மின்வாரிய குடியிருப்பு பகுதியில் காலை முதலே ஆக்ரோசமாக சுற்றித்திரிந்த காட்டெருமை.
ஞ்சூர் மின்வாரிய குடியிருப்பு பகுதியில் தனியார் குடியிருப்புகளும் மின்வாரிய குடியிருப்புகளும் அதிகம் உள்ளன. சன் பிளவர் பில்டிங் லைன் பகுதியில் தேயிலைத் தோட்டத்திலிருந்து குடியிருப்பு முன்பாக ஆக்ரோஷமாக மரங்களையும் தேயிலைச் செடிகளையும் முட்டி தள்ளியவாறு அங்கும் இங்குமாக காட்டெருமை ஆக்ரோஷமாக ஓடியது. இதைக்கண்ட அப்பகுதி குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்தனர். நீண்ட நேரமாக அங்கும் இங்கும் ஓடியதால் வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்தனர். மாலை வரை அந்தப் பகுதியிலே சுற்றி இருந்த காட்டெருமை குடியிருப்பின் தடுப்புச் சுவரைத் தாண்டி மின்வாரிய குடிநீர் தொட்டி பின்புறம் சென்று மறைந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது