கிராமசபை கூட்டம் போல நகர, மாநகர சபைக்கூட்டங்கள் நடத்தும் மாநில அரசின் முடிவுக்கு மநீம வரவேற்பு தெரிவித்துள்ளது. நாங்கள் நீண்டநாள் விடுத்த கோரிக்கை நடைமுறைக்கு வந்துள்ளது பாராட்டத்தக்கது. நகர, மாநகர சபைகளிலும் உள்ளாட்சிகளில் நடைபெறும் பணிகள், அடுத்ததாக நடைபெற வேண்டிய திட்டங்கள் மக்களுடைய கோரிக்கைகளை கேட்டு அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.