• Tue. Jun 16th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

வைகை ஆற்றில் 15 ஆயிரம் கன அடி நீர் திறப்பு வீடியோ

ByA.Tamilselvan

Sep 6, 2022

வைகை அணை நிரம்ப உள்ளதால் அணைக்கு வரும் 15 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
தொடர் மழை காரணமாக வைகை அணை முழு கொள்ளளவை எட்ட உள்ள நிலையில் வைகை ஆற்றின் வழியாக 15,000 கன அடிவீதம் நீர் திறந்துவிடப்பட்டு மதுரை வைகை ஆற்றில் செல்ல உள்ளதால் பொதுமக்கள் வைகை ஆற்றில் இறங்க வேண்டாம் . அதே போல ஆற்றில் மேய்ச்சலுக்கு சென்ற கால்நடை களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுமாறு மதுரை கலெக்டர் அனிஷ்சேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஏற்கனவே மதுரை ஏவி மேம்பாலம் பகுதியில் கரைகளை தொட்ட படியே வெள்ளம் செல்லும் நிலையில் மேலும் 15 ஆயிரம் கன அடி நீர் திறப்பு செய்யப்பட்டால் கரையோர பகுதிகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.