• Thu. Apr 18th, 2024

மதுரை வைகையாற்றில் வெள்ளப் பெருக்கு…

Byகாயத்ரி

Sep 6, 2022

மதுரை வைகையாற்றில் வெள்ளப் பெருக்கு, ஆற்றில் வினாடிக்கு 15,000 கன அடி நீர் வர துவங்கியதால் இணைப்பு சாலைகளில் போக்குவரத்து நிறுத்தம். வைகை அணை மற்றும் பிற ஆறுகளில் இருந்து வைகையாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் மதுரை வைகையாற்றில் வெள்ளப் பெருக்கு. யானைக்கல், மீனாட்சி கல்லூரி இணைப்பு சாலைகளில் போக்குவரத்து நிறுத்தம். ஆற்றின் கரை பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் எச்சரிக்கை.