வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களுக்கு அதன் சிஇஓ பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளார்.வாட்ஸ்அப் செயலியை பிளே ஸ்டோரில் மட்டும் தரவிறக்கம் செய்யுமாறு அந்நிறுவனத்தின் சிஇஓ கேத்கார்ட் எச்சரித்துள்ளார். வாட்ஸ்அப் ஆப்பைவிட அதிக அம்சங்கள் அடங்கிய “ஹே வாட்ஸ் அப் ” என்ற போலி செயலி இணையத்தில் கிடைக்கிறது. அதை பயன்படுத்துபவர்களின் போன்களில் உள்ள தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுகின்றன.அந்த செயலியை தடுக்க கூகுளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். தங்கள் குடும்ப உறுப்பினர்கள் யாராவது அந்த செயலியை பயன்படுத்தினால் எச்சரிக்கவும் என கூறியுள்ளார்.