அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து, நாளை தேனி பங்களா மேடு பகுதியில் காலை 10:00 மணிக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் ஆணைக்கினங்க.. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் தி.மு.க., வை கண்டித்து, தேனி மாவட்ட அ.இ.அ.தி.மு.க., சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நமது மாவட்ட, ஒன்றிய, பேரூர் ஊராட்சி கிளை கழக மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு பெரியகுளம் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.