திமுக கூட்டம் ஒன்றில் திமுக மாநில மகளிரணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் பேசிய விதம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. இந்த தேர்தலில் கொங்கு மண்டலம் மொத்தத்தையும் திமுக கைப்பற்றியுள்ளது. முக்கியமாக கோவை தேர்தல் பொறுப்பாளர் செந்தில் பாலாஜி உழைப்பால் திமுக மாபெரும் வெற்றியை கோவையில் பெற்றுள்ளது.
கோவை மாநகராட்சிக்கு தற்போது மேயரை தேர்வு செய்ய ஆலோசனை நடந்து வருகின்றன. மேயர் ரேஸில் பல நிர்வாகிகள் இருப்பதால் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து பல்வேறு கட்ட ஆலோசனைகளை செய்து வருகிறார்.
இந்த நிலையில் கோவையில் நேற்று ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில மகளிரணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் கலந்து கொண்டார். அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த மேடையில் இருந்தார். கோவை மற்றும் மற்ற சில கொங்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் இந்த மேடையில் இடம்பெற்று இருந்தனர். தேர்தல் சீட் கிடைக்காத விரக்தியில் மாநில மகளிரணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் இந்த கூட்டத்தில் கடுமையாக பேசியதுதான் தற்போது சர்ச்சையாகி உள்ளது.
மீனா ஜெயக்குமார் பெசும்போது, கோவையில் திமுக வென்றதில் மகிழ்ச்சி. அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவை பொறுப்பாளராக நியமித்த போது ஒரு நல்ல ஆம்பிளை கோவைக்கு வந்துவிட்டார் என்று சந்தோஷப்பட்டேன். தலைவர் நல்ல ஆண் ஒருவரை அனுப்பி இருக்கிறார் என்று சந்தோசமாக இருந்தேன். என்னை தேர்தலில் புறக்கணித்து உள்ளனர்.
மாவட்டப் பொறுப்பாளர் கார்த்தி சொல்லித்தான் எனக்கு இந்த புறக்கணிப்பு நிகழ்ந்து உள்ளது. அவர்தான் எனக்கு எதிராக பேசி வருகிறார். நான் மனம் விட்டு சொல்கிறேன்.. என்னை பற்றி அவர் மோசமான வார்த்தைகளில் பேசினார். (மேடையில் அந்த வார்த்தைகளை குறிப்பிட்டார் மீனா ஜெயக்குமார்). என்னை பற்றி பலரிடம் தவறான தகவல்களை பரபபினார்.

அவருக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அவர் தொடர்ந்து என்னை பற்றி தவறாக பேசி வருகிறார் என்று கூறி மீனா ஜெயக்குமார் மாவட்டப் பொறுப்பாளர் கார்த்தி மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அதோடு அங்கேயே கெட்ட வார்த்தைகளில் பேசியவர், சில தகாத சொற்களை பயன்படுத்தி தன்னை மாவட்டப் பொறுப்பாளர் கார்த்தி திட்டியதாகவும் கூறினார். இதனால் மேடையில் சலசலப்பு ஏற்பட்டது.
ஆனால் மீனா ஜெயக்குமார் பேச்சை நிறுத்தவில்லை.. உங்க பொண்டாட்டிக்கு வாய்ப்பு கொடுக்கணும்னு எனக்கு வாய்ப்பு கொடுக்காமல் விட்டுடீங்க என்று மாவட்டப் பொறுப்பாளர் கார்த்தி மீது மீனா குற்றஞ்சாட்டினார். இதையடுத்து மேடையில் கைதட்டல்கள் கேட்டன. இதையடுத்து அங்கு இருந்த செந்தில் பாலாஜி மீனா ஜெயக்குமாரை பார்த்து.. பிறகு பேசுங்கள் என்று கை காட்டினார். ஆனால் அதை மீனா பார்க்கவில்லை. தொடர்ந்து மீனா ஜெயக்குமார் மாவட்டப் பொறுப்பாளர் கார்த்தி பற்றி ஒருமையில் பேசினார்.

இதனால் அங்கு கூட்டத்தில் இருந்தவர்கள்.. மாவட்டப் பொறுப்பாளர் கார்த்தி பற்றி நீ எப்படி பேசலாம்.. மன்னிப்பு கேள் என்று கோஷம் போட்டனர். இதனால் அங்கு பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து தனக்கு முன்பு இருந்த மைக்கை எடுத்த செந்தில் பாலாஜி.. கூட்டத்தில் இருக்குறவங்க அமைதியா இருங்க.. தப்பா பேசாதீங்க என்றார். அதன்பின் மீனா ஜெயக்குமாரை அமைதிப்படுத்தி அமரும்படி கூறினார். புகார் இருந்தால் தனிப்பட்ட வகையில் சொல்லுங்கள்.

இப்படி பொது மேடையில் பேச வேண்டாம். இப்படி பேசுவது தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தும். நாம் கட்சி ரீதியான ஆலோசனையில் இருக்கிறோம். உங்கள் புகாரை தனியாக கொடுங்கள் என்று மீனா ஜெயக்குமார் என்று கூறினார். இதையயடுத்து ஒரு வழியாக சமாதானம் அடைந்த மீனா ஜெயக்குமார் தனது இருக்கையில் சென்று அமர்ந்தார். இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலாகி உள்ளது.

- மதுரை தல்லாகுளம் பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு..!மதுரை மாவட்டம், மதுரை தல்லாகுளம் பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டுள்ளது.மதுரை மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் […]
- இன்று இந்திய இயற்பியலாளர் அல்லாடி ராமகிருஷ்ணன் நினைவு நாள்துகள் இயற்பியல், குவாண்டம் இயந்திரவியல், அணிக்கோவை இயற்கணிதம், சிறப்புச் சார்பியல் கொள்கை போன்றவற்றில் பங்களித்துள்ள, இந்திய […]
- கள் விற்பனை செய்தவர்கள் கைது..!மதுரை மாவட்டம், பேரையூர் அருகே கள் விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டம் […]
- திருப்பூர், கோவை, பல்லடம் பகுதியில் திருடிய டூவீலரை மதுரையில் விற்க முயன்ற 2 பேர் கைதுதிருப்பூர், கோவை, பல்லடம் பகுதியில் நூதன முறையில் விலையுயர்ந்த டூவீலரை திருடி., மதுரையில் ஒரிஜினல் RC […]
- ஒடிசா ரயில் விபத்து : உதவிக்கரம் நீட்டிய ரிலையன்ஸ் நிறுவனம்..!ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட ரிலையன்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.“பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 மாதங்களுக்கு கோதுமை […]
- ஆதார் விவரங்களை இலவசமாக மாற்ற 8 நாட்களே உள்ளன!அடிப்படை அடையாள ஆவணமாக கருதப்படும் மிக முக்கியமான ஆவணமாக ஆதார் அட்டை உள்ளது.ஆதாரில் உள்ளிடப்பட்ட தரவு […]
- டைரக்டர் என்.லிங்குசாமி – கனிமொழி எம்.பி திடீர் சந்திப்பு!கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி தொகுக்கப்பட்ட ஹைக்கூ புத்தகத்தை கனிமொழி எம்.பியிடம் வழங்கிய […]
- திருப்பரங்குன்றம் அருகே மின்னல் தாக்கி பெண் பலிமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா கொம்படி கிராமத்த்தில் மின்னல் தாக்கி பெண் பலியான சம்பவம் பெரும் […]
- மதுரை மாநகராட்சி மண்டலம் 5ல் புதிய ஆரம்ப நகர்புற நல்வாழ்வு மையம் திறப்புமதுரை மாநகராட்சி மண்டலம் 5ல் உள்ள 94வது வார்டு மகாலட்சுமி காலணியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப […]
- ஜெயங்கொண்டம் அருகே 83 -84 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்புஜெயங்கொண்டம் அடுத்துள்ள மீன்சுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில். 83 -84 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு […]
- கடையநல்லூரில் புதிய ஏ.என்.பி.ஆர் கேமரா இயக்கத்தை காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்கடையநல்லூரில் புதிதாக அமைக்கப்பட்ட ஏ.என்.பி.ஆர் கேமரா இயக்கத்தை திறந்து வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி […]
- மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாம்மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் மேயர் தலைமையில் நடைபெற்றதுமதுரை மாநகராட்சி […]
- அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் மண்டல அலுவலகம் முன்பாக […]
- நுழைவு தேர்வு இல்லாமல் சென்னை ஐஐடியில் சேரலாம்எந்தவொரு நுழைவுத் தேர்வும் இல்லாமல் சென்னை ஐஐடியில் சேர அற்புதமான ஒரு வாய்ப்பு இருக்கிறது.இந்தியளவில் டாப் […]
- ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!அத்துமீறி பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் ஆளுநர்”நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை அறிந்தும் […]