திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், மார்ச் 7ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை பங்குனி பெருவிழா நடைபெற உள்ளது!
மார்ச் 7ம் தேதி, பங்குனி திருவிழா வாஸ்து சாந்தி நிகழ்வும், 8ம் தேதி கொடியேற்றம் நிகழ்ச்சியும், 18ம் தேதி பங்குனி உத்திர நிகழ்வும், 20ம் தேதி பட்டாபிஷேக நிகழ்ச்சியும், 21ம் தேதி திருக்கல்யாணம் நிகழ்வும், 22ம் தேதி திருத்தேர் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது!
நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்று இறைவனின் ஆசி பெறுமாறு, கோவில் நிர்வாகம் சார்பில், கோயில் இணை ஆணையர் க.செல்லத்துரை, நிர்வாக அதிகாரி எல்.கலைவாணன் ஆகியோர் பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.