• Fri. Jun 2nd, 2023

மகா சிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரியில் பக்தர்களுக்கு அனுமதி!!

சதுரகிரி மலைக்கு செல்ல நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதியளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்கு பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி என மக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும். சுமார் 4,500 அடி உயரத்தில் உள்ள இந்தக் கோயில் 4 திசைகளிலும், மலைகளால் சூழப்பட்டு 64 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்டது.

இந்நிலையில், பிரதோஷம் மற்றும் மார்ச் 1-ம் தேதி மகா சிவராத்திரி விழாவையொட்டி நாளை முதல் மார்ச் 3 வரை பக்தர்கள் சதுரகிரி மலைக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இருப்பினும் பக்தர்கள் நீரோடைகளில் குளிக்க தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பல மாதங்களாக சதுரகிரியில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வரும் நிலையில் முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் அனுமதியளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *