• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

யார் பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது: எடப்பாடி பாய்ச்சல்

Byகாயத்ரி

Feb 9, 2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அதிமுக களம் இறங்கியுள்ளது. சேலையூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி “நான் பெற்ற பிள்ளைக்கு ஸ்டாலின் பெயர் வைக்கிறார்” என, விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் அனைத்து கட்சிகளிலும் சூடு பிடித்துள்ளது. தாம்பரம் மாநகராட்சியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சேலையூரில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: “இந்திய துணைக் கண்டத்திலேயே அதிக தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது திமுக.அது ஏன் என்றால், எதையுமே செய்யப்போவதில்லை என்பதற்காகத்தான். ஆனால், 75 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக பொய் கூறுகின்றனர்.
பொம்மைக்கு கீ கொடுப்பது போல் ஸ்டாலின் செயல்படுகிறார்; அதிகாரிகள் சொல்வதை அறிவித்து வருகிறார். அதிமுக ஆட்சியில் நான் முதல்வராக இருந்தபோது கொண்டுவந்த திட்டங்கள், பாலங்கள், கட்டடங்ளை ஸ்டாலின் திறந்து வைக்கிறார். நான் பெற்ற பிள்ளைக்கு அவர் பெயர் வைக்கிறார்” இவ்வாறு அவர் பேசினார்.