கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 30.
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி, பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
சௌந்தர்யாவுக்கு நான்கு மாத குழந்தை உள்ளது. சௌந்தர்யா உடலுக்கு தற்போது பௌரிங் அண்ட் லேடி கர்சன் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. இது தற்கொலையா..? அல்லது வேறு காரணமா..? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்!