திமுக நிர்வாகிகள் மற்றும் தொழிலதிபர்களை பெண்ணுடன் தொடர்பு ஏற்படுத்தி அதனை வீடியோ மற்றும் ஆடியோ பதிவு செய்து பணம் கேட்டு மிரட்டியதாக குற்றச்சாட்டு. பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க வாக்குமூலம்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகேயுள்ள இடங்கணசாலை பேரூராட்சி தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதும் நகராட்சியாக மாற்றியது. இளம்பிள்ளை என்றாலே பட்டுத்தறி ஜவுளி உற்பத்தியில் கொடிகட்டி பறக்கும் தொழிலதிபர்கள், அதிமுக மற்றும் திமுக கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதியாகவும் திகழ்ந்து வருகிறது.
இந்நிலையில் சேலம் மேற்கு மாவட்ட திமுக தொண்டரணி அமைப்பாளராக உள்ள செல்வம் என்பவர் சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த கலைச்செல்வி என்ற பெண்ணிற்கு அரசு வேலை வாங்கித் தருவதாகவும், அதற்காக தான் அடையாளம் தெரிவிக்கும் 6 பேரிடம் ஆபாசமாக பேசி கால்ரெக்கார்டிங் செய்து தரும்படியும் கேட்டதாக கூறப்படுகிறது. இதனை ஏற்றுக்கொண்ட அந்த பெண் 6 பேரிடம் ஆபாசமாக பேசி மயக்கியதில் 3 பேர் இந்த பெண்ணின் வலையில் மயங்கினர்.
அந்த பெண்ணின் வீட்டிற்கு வருவதாகவும், அங்கு தனிமையில் இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்திய செல்வம் கலைசெல்வியின் வீட்டில் ரகசிய கேமராவை வைத்துள்ளார். அடுத்தடுத்த நாள் ஒவ்வொருவராக அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளனர். வீட்டில் அவர்களின் நடவடிக்கைகளை வீடியோ பதிவுசெய்து அந்த வீடியோ காட்சிகளை செல்வத்திடம் கொடுத்துள்ளார் அந்த பெண்.
பின்னர் அந்த வீடியோ மற்றும் அவர்கள் கலைச்செல்வியிடம் பேசிய ஆடியோ ஆகியவற்றை அவர்களிடம் காட்டி மிரட்டல் விடுத்து கோடிக்கணக்கான ரூபாய் பணம் பறித்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அந்த பெண்ணை தன்னிடம் தகாத முறையில் நடந்துக்கொண்டதாக 3 பேர் மீது சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்க வைத்துள்ளார்.
தொடர்ந்து பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் 3 பேரும் அந்த பெண் பேசிய ஆடியோவை ஆதாரமாக கொண்டு மறைமுகமாக சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடமும் புகார் அளித்துள்ளனர். ஒரு கட்டமாக அனைவரும் வெளியே தெரிந்தால் கேவலம் என நினைத்து பேச்சுவார்த்தை நடத்தி அனைத்தையும் மூடிமறைத்து விட்டனர்.
இதனிடையே செல்வத்தின் வலதுகரமாக இருந்த அவரது நண்பர் ரூபக் என்பவர் அந்த பெண்ணிடம் பேசிய ஆடியோ ரெக்கார்டிங், வீடியோ ஆதாரங்களை வைத்து தனக்கும் பறிக்கப்பட்ட பணத்தில் பங்கு கேட்டுள்ளார். இதனிடையே செல்வத்தின் தம்பியை ரூபக் அடித்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து மகுடஞ்சாவடி போலீசார் ரூபக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து ரூபக் மீது கலைச்செல்வி மகுடஞ்சாவடி காவல்நிலையத்தில் மேலும் ஒரு புகார் அளித்துள்ளார்.
தற்போது இந்த லீலைகளின் ஆடியோ, வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே செல்வம் இடங்கணசாலை நகராட்சி தேர்தலில் போட்டியிட்டு சேர்மேன் ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளை சிக்க விட்டு தொழிலதிபர்களிடம் தேர்தல் செலவிற்காக பணத்தையும் பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த பிரச்சனையிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் எனவும் செல்வம் சொல்லிதான் இவை அனைத்தையும் செய்தேன் என கலைச்செல்வி வாக்குமூலமாக கூறும் வீடியோ வெளியாகி உள்ளது.
அதில் நாகேந்திரன், ராமச்சந்திரன்,ரவி ஆகியோரை வீடியோ பதிவு செய்துள்ளதாகவும், மேலும் சிலர் இன்னமும் எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார். அதேபோல், தன்னை காரில் கடத்தி சென்று இவ்வாறு பேச சொல்லி மிரட்டியதாக ஒரு வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
காவல்துறையினர் தனிப்படை அமைத்து உண்மை தன்மையை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகவுள்ளது.
அடையாளம் தெரியாத ஒரு பெண் ஆபாசமாக பேசும்போது அந்த பெண்ணின் வீட்டிற்கே சென்று வீடியோ பதிவில் சிக்கிக்கொண்டு வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் முக்கிய பிரமுகர்களின் இந்த நிலை மற்றவர்களுக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது..
- திமுக ஆட்சியை நினைத்தால் பயமாக இருக்கிறது” – வானதி சீனிவாசன்இன்னும் 4 ஆண்டுகள்நடைபெற உள்ள திமு.க ஆட்சியை நினைத்தால் பயமாக இருக்கிறது ” , எம்எல்ஏவுமான […]
- கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குசிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவுசீனாவை சேர்ந்த 263 பேர்களுக்கு முறைகேடாக […]
- தி கிரே மேன் ட்ரெய்லர்… கடுப்பான தனுஷ் ரசிகர்கள்…2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலமாக தமிழ் திரையுலகை ஹீரோவாக அறிமுகமானவர் […]
- மதுரையில் ஜூன்.4-5ம்தேதிகளில் துறவியர் மாநாடுமதுரையில் வருகின்ற ஜூன் 4 மற்றும் 5ம் தேதி துறவியர் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாடு […]
- வெல்கம் பேக் மோடி சொல்லவேண்டிய நிலையில் திமு.க உள்ளது.-பாஜக மாநில செயலாளர் பேட்டிதிமுக எதிர்க்கட்சியாக இருந்த போது கோ பேக் மோடி என்று சொன்ன நிலையில், ஆளுங்கட்சியாக வெல்கம் […]
- ஒ.பன்னீர்செல்வத்திற்கு கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்புஸ்ரீவில்லிபுத்தூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த முன்னாள் முதலமைச்சர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திற்கு […]
- இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 3 பேர் கைதுகழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது […]
- காங்கிரசில் இருந்து விலகிய கபில்சிபில்-சமாஜ்வாதியில் இணைந்தார்காங்கிரஸ் கட்சி கடந்த 2014, 2019 ஆகிய இரு மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், […]
- 10ம் வகுப்புபடத்தால்போதும் ஆவின் நிறுவனத்தில் காத்திருக்கும் உடனடி வேலை!மதுரை ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள எலக்டிரீசியன் வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், […]
- படப்பிடிப்பை முடித்து சென்னை வந்தார் நடிகர் விஜய்…நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் நடித்து வரும் புது திரைப்படமானது இப்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. […]
- கண்கள் பளிச்சிட:முதலில் ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்கவும். இதை ஒரு வெள்ளைத் துணியில் கட்டி, […]
- பட்டர் சிக்கன்:தேவையான பொருட்கள்:எலும்பில்லாத சிக்கன் – 1ஃ2 கிலோ, வெங்காயம் – 4, தக்காளி – 3, […]
- நாளை மறுநாள் பூமிக்கு அருகே வரும் விண்கல் -ஆபத்து ஏற்படுமா?பூமியை நெருங்கும் சுமார் 2 கிமீ அகலமுள்ள மிகப் பெரிய விண்கல் ஆபத்து எற்படுத்துமா என்பது […]
- சிந்தனைத் துளிகள்• ஆசையின் வேட்கையை அடக்கவும் முடியாது, தீர்த்து வைக்கவும் முடியாது. • மன அமைதியில் அடங்கியதே […]
- பொது அறிவு வினா விடைகள்டஜன் என்றால் என்ன?12 பொருட்கள் குரோசு என்றால் என்ன?12 டஜன் (144 பொருட்கள்) ஸ்கோர் என்றால் […]