இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பகுதியான வாகாவில் நாள்தோறும் இரு நாட்டு பாதுகாப்பு படையினரால் கொடியிறக்க நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.
இந்த நிகழ்ச்சியை பொதுமக்களும் பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.இந்நிலையில், தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு நலன் கருதி அட்டாரி – வாகா எல்லையில் நடைபெறும் தினசரி கொடியிறக்கும் நிகழ்வில் பொதுமக்கள் பங்கேற்க தடை விதிக்கப்படுவதாக எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.