80 வது சுதந்திர தினத்தினையொட்டி இன்று 15-08-2026(சனிக்கிழமை)
புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில் முதன்மைக்கல்வி அலுவலர் கூ.சண்முகம் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர்( இடைநிலை) ராஜூ, முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் ( மேல்நிலை) திருமேனிநாதன், ( இடைநிலை) மாரிமுத்து,
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் உதவித்திட்ட அலுவலர் செந்தில், மாவட்டச்சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில், பள்ளித்துணை ஆய்வாளர்கள் வேலுச்சாமி, குருமாரிமுத்து மற்றும் அலுவலகப்பணியாளர்கள் கலந்துகொண்டனர்.





