விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முத்துசாமிபுரம் கிராமத்தில் கடந்த ஜூலை 31ஆம் தேதி நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 80 சதவீதம் தீக்காயங்களுடன் விருதுநகர் அரசு மருத்துவமனையில் காக்கிவாடான்பட்டியை சேர்ந்த சுப்ரமணியன் (வயது 62 ) சிகிச்சை பெற்று வந்தார்.

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இறந்தார். அவருக்கு மாரியம்மாள்( வயது 57 ) என்ற மனைவியும் பொன்ராஜ் என்ற மகனும் உள்ளனர்.




