திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக குருதி கொடையாளர் தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) அம்மையார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.

மேலும், மருத்துவக் கல்லூரி முதல்வர், மருத்துவக் கண்காணிப்பாளர், துணை இருப்பிட மருத்துவ அலுவலர், மருத்துவர்கள், இரத்த வங்கி குழுவினர், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் குருதி கொடையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.



