வேடசந்தூர் அருகே கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் கணேசன் மூர்த்தி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது,

பூத்தாம்பட்டி, டாஸ்மாக் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர் . அப்போது அவர் வேடசந்தூர் கோட்டைமந்தையை சேர்ந்த சுந்தரபாண்டி(29) என்று தெரியவந்தது. அபாயகரமான கத்தியுடன் சுற்றி திரிந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சுந்தரபாண்டியை கைது செய்தனர்.



