விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இயங்கி வரும் பிரபலமான வடிவேல் பட்டாசு தொழிற்சாலைகளின் சார்பாக பட்டாசு தொழிற்சாலை தலைமை அலுவலக வளாகத்தில் 81வது ஆண்டு விழா மற்றும் அனிதா அம்மையாரின் நினைவாக இரண்டாம் ஆண்டு விழாவில் பட்டாசு தொழிற்சாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் மகன்கள்,மகள்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, பதக்கம், நினைவு பரிசுகளை உரிமையாளர்கள் ஆறுமுகசாமி, வசந்த விகாஸ், .அதிபன் ஆகியோர் வழங்கி பாராட்டினார்கள்.

தொடர்ந்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி மரக்கன்றுகள் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.




