விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், வெம்பக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் 1435 ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (வருவாய் கிராம கணக்குகள் தணிக்கை) இரண்டாம் நாளான இன்று வருவாய் தீர்வாய அலுவலர்/ தனித் துணை ஆட்சியா் (ச.பா.தி.), விருதுநகா் அவர்களால் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

மேற்படி பெறப்பட்ட மனுக்களில் 4 பட்டாமாறுதல் கோாிக்கை மனுக்கள் மீது உடனடியாக தீா்வு காணப்பட்டு, மேற்படி பயனாளிகளுக்கு வருவாய் தீா்வாய அலுவலா் அவா்களால் பட்டா உத்தரவு வழங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக வருவாய் தீர்வாய அலுவலர்/ தனித் துணை ஆட்சியா் (ச.பா.தி.), விருதுநகா் அவர்களால் வெம்பக்கோட்டை வட்டம், கீழாண்மறைநாடு வருவாய் கிராமத்திற்குட்பட்ட 17 பயனாளிகளுக்கு இணைய வழி இ-பட்டாக்கள் வழங்கப்பட்டு ஆலங்குளம் குறுவட்டத்திற்குட்பட்ட கிராம கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டது.





