அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் ஆவணங்கள் மாயம் என புகார் எழுந்துள்ளது

டெண்டர்கள், கொள்முதல் தொடர்பான ஆவணங்கள் அடங்கிய 18 ஹார்டு டிஸ்குகள் திருடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிக அளவில் மின்சார வாரியத்தின் நிலக்கரி கொள்முதல் பற்றிய விவரங்கள் திருட்டு என காவல் நிலையத்தில் புகார் கூறப்பட்டுள்ளது.
அச்சிடப்பட்ட நகல்கள் மின்சார வாரியத்தின் வசம் இருப்பதாக கூறப்படுகிறது
மின்வாரிய அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வுக்கு பின் திருட்டு சம்பவம் அரங்கேறி இருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.



