திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோவில் வைகாசி மாதம் பௌர்ணமி தினம் முன்னிட்டு நேற்று விளக்கு பூஜை விழ நடைபெற்றது.

இந்த விழாவில் முத்து மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை செய்தும், அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் அருள் பலித்தார் மேலும் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் செய்து ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் வழிபட்டனர். கொடைரோடு சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இவ்விழா ஏற்பாடுகளை அம்மையநாயக்கனூர் விழா குழு, பொதுமக்கள் செய்து இருந்தனர்.



