விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கோட்டைப்பட்டியில் முத்துராஜ் நாயுடு நினைவு அறக்கட்டளை மற்றும் விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் ஓபிசி பிரிவு சார்பில் கண் சிகிச்சை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

டாக்டர்.முகமது சாகீர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கிட்டப்பார்வை, தூரப் பார்வை, மாலைக்கண் நோய், கண்புரை நோய், கண்ணில் சீழ் வடிதல், உள்ளிட்ட கண் சம்பந்தமான பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர். காங்கிரஸ் கமிட்டி மேற்கு மாவட்ட தலைவர் ஓபிசி பிரிவு சுப்புராம் முன்னில வகித்தார்.

மேல தாயில்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை (NMMS) National Means Cum Merit Scholarship தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி விருதும் ரூபாய் 1000 பரிசு தொகை வழங்கப்பட்டது.



