• Sun. May 10th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..,

Byமுகமதி

May 10, 2026

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆதரவு பெற்று இன்று தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சி வடக்கு சார்பில் காங்கிரஸ் கட்சியினர்

காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பாக மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெனட் அந்தோணி ராஜ் ஆலோசனையின் பேரில் மாநகர தலைவர்கள் மதன் கண்ணன் பாருக் ஜெய்லானி ஆகியோர் தலைமையில் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் சூர்யா பழனியப்பன் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர்கள் வேங்கை அருணாசலம் பழனிசாமி பாலாண்டார் செம்பை மணி மாவட்ட கலைப் பிரிவு தலைவர் மேப் வீரையா சிவக்குமார் மாமன்ற உறுப்பினர் ராஜா முகமது நகர காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர்கள் எஸ் .ஏ. காதர் மைதீன் திருவப்பூர் மணி ஆறுமுகம் ஆகியோர் முன்னிலையில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.

தொடர்ந்து டிவிஎஸ் கார்னர் பழைய பேருந்து நிலையம் புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் பட்டாசுகள் வெடிகள் வெடித்து ம் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் தினேஷ் குமார் எம் ஏ கே சேட்டு ராசாப்பட்டி அடைக்கலம் முக்கனாமலைப்பட்டி ஏ. முகமது கனி வழக்கறிஞர்கள் அஜ்மல் கான். தனபதிபசுபதி. திருக் கட்டளை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜெயபாலன் திருவரங்குளம் ஒன்றிய கவுன்சிலர் துரைக்கண்ணன் அருள் முருகன் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி சுந்தர் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் குட்லக் அப்துல்லா மாவட்ட சேவா தளம் பிரிவு தலைவர் ஓம் ராஜ் மாவட்ட மகளிர் அணி தலைவர் கவுரி சகாய ராஜ் உள்பட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.