மதுரை செல்லூர் மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் துரை (வயது 42) தனது குடும்பத்தினருடன் செல்லூரில் இருந்து நாட்டாமங்கலம் கோவிலுக்கு நாகமலை புதுக்கோட்டை மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாலத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது செக்கனூரணியில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் மோதியதில் துரை ஓட்டி வந்த ஆட்டோ பலத்த சேதமடைந்து துரை மற்றும் 4 பெண்கள் உள்பட 5 பேர்பலத்த காயமடைந்தனர். காயமடைந்து 5பேரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு முதலுதவிக்காக கொண்டு செல்லப்பட்டனர். நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர் .




