திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா இன்று (வியாழக்கிழமை) பழனி அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 31-ம் தேதி நடைபெறுகிறது
பங்குனி உத்திர திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் ஏப்ரல் 1-ம் தேதி மாலை நடைபெறுகிறது
ஏப்ரல் 4-ம் தேதி கொடி இறக்குதலுடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவு பெறுகிறது.




