கோவை மாநகரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இந்நிலையில் சரவணம்பட்டி, சின்ன வேடம்பட்டி, கணபதி, சூலூர், கோவைபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு காற்றுடன் கூடிய மழை பெய்தது.

இதில் சரவணம்பட்டி பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக ஆலங்கட்டி மழை பெய்தது. அப்பொழுது விழுந்த சிறிய அளவிலான ஐஸ் கட்டிகளை சிறுவர்கள் கைகளில் எடுத்து விளையாடி மகிழ்ந்தனர்.



