• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

தனியார் பள்ளியின் சார்பில் நீர் சேமிப்பு அவசியம் குறித்து விழிப்புணர்வு..,

ByP.Thangapandi

Mar 12, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு தனியார் பள்ளியின் சார்பில் நீர் சேமிப்பு குறித்தும் அதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.,

இதில் 58 கால்வாய் விவசாய சங்கத்தின் சார்பில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கோடை காலங்களில் தண்ணீரை எவ்வாறு சேமிப்பது, அதனை எவ்வாறு சிக்கனப்படுத்துவதும் குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.,

இதில் பள்ளி மாணவ மாணவிகள் பள்ளி ஆசிரியர்கள், போக்குவரத்து காவல்துறையினர்,விவசாயி சங்கத்தினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தண்ணீர் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.,