மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு தனியார் பள்ளியின் சார்பில் நீர் சேமிப்பு குறித்தும் அதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.,

இதில் 58 கால்வாய் விவசாய சங்கத்தின் சார்பில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கோடை காலங்களில் தண்ணீரை எவ்வாறு சேமிப்பது, அதனை எவ்வாறு சிக்கனப்படுத்துவதும் குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.,

இதில் பள்ளி மாணவ மாணவிகள் பள்ளி ஆசிரியர்கள், போக்குவரத்து காவல்துறையினர்,விவசாயி சங்கத்தினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தண்ணீர் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.,



