• Thu. Aug 6th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல்லில் கொடி அணிவகுப்பு..,

ByS.Ariyanayagam

Mar 12, 2026

திண்டுக்கல்லில் காவல்துறையினர் மற்றும் மத்திய ஆயுதப்படையினர் இணைந்து கொடி அணி வகுப்பு நடந்தது.

வருகின்ற சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு மக்களாட்சியை வலுப்படுத்திட அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கும் விதமாகவும், பொதுமக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் ஜனநாயக கடமையை நிறைவேற்றவும்

திண்டுக்கல் மாவட்ட S.P.பிரதீப் உத்தரவின் பேரில் DCRB டிஎஸ்பி.சுபக்குமார் தலைமையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி சார்பு ஆய்வாளர்கள் வாணி, பிரபாகரன் மற்றும் காவலர்கள் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் இணைந்து திருச்சி ரோடு வ.உ.சி. சிலை பகுதியில் இருந்து பேருந்து நிலையம் புறக்காவல் நிலையம் வரை கொடி அணி வகுப்பு ஊர்வலமானது நடைபெற்றது.