பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு நாளை முன்னிட்டு நாகர்கோவிலில் உள்ள பேரறிஞர் அண்ணா திருஉருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சரும், குமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான என்.தளவாய்சுந்தரம், எம்.எல்.ஏ., தலைமையில் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர்கள் முன்னாள் எம்.பி., நாஞ்சில் வின்சென்ட், முன்னாள் அமைச்சர் பச்சைமால், மாவட்ட கழக இணைச் செயலாளர் சாந்தினி பகவதியப்பன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் அக்சயாகண்ணன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.











