• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விருதுநகரில் திமுக கூட்டத்தில் காதைப் பிளந்த விசில் சத்தம்!

விருதுநகர் அருப்புக்கோட்டை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில், இன்று மாலை விருதுநகர் வடக்கு மாவட்ட சட்டமன்ற திமுக இளைஞரணி அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ARR சீனிவாசன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராகத் திருப்பூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ் கலந்துகொண்டார்.

கூட்டத்தில் ARR சீனிவாசன் பேசுகையில்:

  • “வருகின்ற பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள மண்டல மாநாட்டில் நாம் அதிக அளவில் பங்கேற்க வேண்டும். உங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களை இதில் பெருமளவில் பங்கேற்கச் செய்ய நீங்கள் பணியாற்ற வேண்டும்.” 🤝
  • “நமது திமுக தலைவர் தளபதி ஸ்டாலினை மீண்டும் முதல்வராக அமர வைக்க மக்களிடம் சென்று, அவர் செய்த பல நல்ல திட்டங்களை எடுத்துச் சொல்ல வேண்டும்.” 🗳️

இந்நிகழ்வில், விருதுநகர் இளைஞரணி நகர அமைப்பாளராக J. முஹம்மது பாசில் பெயர் வெளியான முரசொலி நாளிதழை ARR சீனிவாசன் மற்றும் யுவராஜ் இணைந்து வழங்கினார்கள்.

கூட்டத்தில் நகரச் செயலாளர் SRS தனபாலன், நகர்மன்ற தலைவர் மாதவன், பொதுக்குழு உறுப்பினர் மதியழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்திகேயன் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். 📋

சுவாரசியமான நிகழ்வு:
ARR சீனிவாசன் பேசும்போது, கூட்டத்திலிருந்த இளைஞர்கள் உற்சாக மிகுதியால் விசில் அடித்தனர். “தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தேர்தல் ஆணையம் விசில் சின்னம் வழங்கியதால், விசில் தட்டுப்பாடு ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் விசில் இல்லையென்றால் என்ன, நமது இரு விரல்கள் உள்ளன!” என்று கூறி, இளைஞர்கள் விசிலடித்ததில் அரங்கமே அதிர்ந்தது.