• Tue. Mar 17th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

அரசு தொடக்கப்பள்ளியில் கலை நிகழ்ச்சி..,

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கிராமங்களம் தெற்கு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒன்றிய தொடக்கப் பட்டையில் பயின்று வரும் 52 மாணவர்களுக்கு நாட்டின் 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு புதிய உலகம் அறக்கட்டளை சார்பாக மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு குடியரசு தின கொடியேற்று விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மேரிலதா கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார் மேலும் நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள் புதிய உலகம் அறக்கட்டளையின் தலைவர் சுலோச்சனா லோகநாதன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.