சபரிமலை செல்ல வேண்டி ஜனாதிபதி திரௌபதி முர்மு வரும் 21 ஆம் தேதி திருவனந்தபுரம் வந்து ராஜ்பவனில் தங்குகிறார்.
22 ஆம் தேதி காலை அங்கிருந்து, ஹெலிகாப்டரில் நிலக்கல் வருகிறார்.
நிலக்கலில் இருந்து சாலை வழியாக பம்பாவை அடையும் அவர் பம்பா நதியில் நீராடவும் திட்டமிட்டுள்ளார்

பின்னர் பம்பாவிலிருந்து மலையேறி புதிய கூர்க்கா ஜீப்பில் சன்னிதானம் சென்று சாமி தரிசனம் செய்கிறார்..
நாட்டின் குடியரசுத் தலைவர் ஒருவர் சபரிமலைக்கு வருவது இதுவே முதல் முறை.
ஜனாதிபதி சபரிமலை வருவதை ஒட்டி 21 ஆம் தேதி பிற்பகல் முதல் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது