இராஜபாளையம் டி.பி மில்ஸ் சாலையில் அமைந்துள்ள வ. உ சிதம்பரனார் பிள்ளை திருவருட்சிலைக்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழக மாவட்ட அம்மா பேரவை செயலாளர் என் எம் கிருஷ்ணராஜ் தலைமையில் இராஜபாளையம் தெற்கு நகர செயலாளர் பரமசிவம் ஏற்பாட்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பின்பு அங்கிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக இணை செயலாளர் அழகர் அணி மற்றும் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் ஏராளமானனோர் கலந்து கொண்டனர்.










