மதுரை அவனியாபுரம் அயன் பாப்பாக்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பால நாகஅம்மாள் திருக்கோவிலில் 36ம் ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வாக 300 பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து இன்று காலை ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டு அம்மனுக்கு ஒன்பது மணிக்கு பால்குடம் சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் அதனைத் தொடர்ந்து 4 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பாலா நாமம் திருக்கோவிலில் 36 ஆண்டு பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகிகள் பூசாரி ம பழனி மற்றும் கார்த்திகேயன் ஏற்பாடு செய்திருந்தனர்.
