• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

ரவீந்திரநாத் கதையின் நாயகியாக ஐஸ்வர்யாராய் நடிக்க ஒப்பந்தம்

ரவீந்திரநாத் தாகூரின் ‛3 உமன்’ என்ற நாவல் மிகவும் புகழ் பெற்றது. இதில் மூன்று விதமான பெண்களின் வாழ்க்கையை அவர் எழுதியுள்ளார். தற்போது இந்த நாவல் இந்தி, ஆங்கில மொழிகளில் திரைப்படமாகிறது.

இதனை இஷிதா கங்குலி இயக்குகிறார். படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. இந்தியா, அமெரிக்கா கூட்டுத் தயாரிப்பில் படம்தயாராகிறது.


இதுபற்றி இஷிதா கங்குலி கூறியிருப்பதாவதுகொரோனா காலத்தில் இந்த படம் பற்றி ஐஸ்வர்யாராய்டம் பேசினேன். அவருக்கு கதை பிடித்திருந்தது.

இதில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டார். அவரைத் தவிர மேலும் இரண்டு கதைநாயகிகள் கதாபாத்திரம் உள்ளன. அதில் நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றார்.