கேரளா திருச்சூரை சேர்ந்தவர் ஜெய்சன் ஜேக்கப். நகை கடை வியாபாரி. கடந்த ஜூன்.14 கோவையில் இருந்து கேரளாவிற்கு காரில் சென்ற போது வாளையாறு அருகே வந்த போது லாரியால் மோதி வழிமறித்த மர்ம கும்பல் காரில் இருந்த 1.25 கிலோ தங்க கட்டிகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வந்தனர். திருச்சூர், கொச்சின் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தங்கக்கட்டிகளை கொள்ளையடித்த வழக்கில் ஆலப்புழாவை அன்சத் (35), மற்றும் விஷ்னு (26) ஆகிய இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
