• Sun. Feb 1st, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

சில்லறை தருவதாக கூறி தப்பித்த ஆசாமி!!

BySeenu

May 29, 2025

சில்லறை தருவதாக கூறி கடையில் பணத்தை பெற்று கொண்டு மின்னல் வேகத்தில் தப்பித்து சென்ற ஆசாமியின் சி.சி.டி.வி காட்சிகள் : சமூக வலை தளங்களில் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது – வழக்கு பதிவு செய்து தேடி வரும் காவல் துறையினர் !!!*

கோவை கரும்பு கடை சாரமேடு பகுதியில் பி.பி சம்சுதீன் என்பவருக்கு சொந்தமான அரஃபா டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் மர்ம ஆசாமி ஒருவர் பொருட்கள் வாங்கிக் கொண்டு அந்த கடைக்கு செல்வதை தேவையான சில்லறை ரூபாய் நோட்டுகள் தருவதாக கூறி 22,000 ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு கடையில் பணி புரியும் நபரை அழைத்துச் சென்று உள்ளார்.

பின்னர் பெட்ரோல் பங்கில் சில்லறை இருப்பதாக கூறி கடையில் பணி புரிந்த நபரும் அதனை நம்பி சென்று நிலையில் பெட்ரோல் பங்க் வாசலில் கடை ஊழியரை இறக்கி விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மின்னல் வேகத்தில் இருசக்கர வாகனத்தில் மர்ம நபர் தப்பித்து சென்று விட்டார்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர். தற்பொழுது இந்த சி.சி.டி.வி காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.