விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் தொடங்கியது. ராஜபாளையம் நகர் கூடைப்பந்து கழகம் சார்பில் 30 வது ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் பி.ஏ.சி.எம் பள்ளி மைதானத்தில் மின்னொளி போட்டியாக நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை, கேரள மின்வாரியம், போலீஸ், பேங்க் ஆப் பரோடா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி போன்றவைகள் பங்கேற்று ஆடுகின்றன. பெண்கள் பிரிவில் மேற்கு ரயில்வே மும்பை, வருமான வரித்துறை சென்னை, கேரள மின்வாரியம், ரைசிங் ஸ்டார் சென்னை அணிகள் பயிற்சியாளர் மேலாளர் என 170 பேர் பங்கேற்று ஆடுகின்றனர்.
முதல் நாள் போட்டியில் பேங்க் ஆப் பரோடா, சென்னை எக்சலன்ஸ் அணியுடன் மோதியது இதில் பேங்க் ஆப் பரோடா அணி அபாரமாக அடி 86 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. எக்சலன்ஸ் அணி 74 புள்ளிகளை பெற்றது. லீக் மற்றும் நாக் அவுட் சுற்றுக்களாக நடைபெறும் போட்டிகளில் மே 15-ல் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரூ. 3 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.
ஏற்பாடுகளை ராஜபாளையம் நகர கூடைப்பந்துக்கழக தலைவர்
ராம்குமார்ராஜா, செயலாளர் பீமானந்த், பொருளாளர், ராம்சிங்ராஜா மற்றும் நிர்வாகிகள் செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் இந்திய விமானப்படை 80 புள்ளிகளை எடுத்து வெற்றி பெற்றது. சென்னை சுங்க இலாகா அணி 56 புள்ளிகள் எடுத்தது.
தொடர்ந்து பெண்களுக்கான போட்டிகளில் கேரள வாரிய மின்வாரிய அணி 65 புள்ளிகள் எடுத்து சிறப்பாக ஆடி வெற்றி பெற்றது. அதை எதிர்த்து போட்டியிட்ட ரைசிங் ஸ்டார் அணி 38 புள்ளிகள் பெற்று இருந்தன.
தொடர்ந்து ஆண்களுக்கான 4 வது போட்டியில் இந்திய கடற்படை அணியினர் சிறப்பாக அடி 76 புள்ளிகளைப் பெற்று வெற்றி பெற்றனர். கேரள மாநில மின்வாரிய அணியினர்51 புள்ளிகளைப் பெற்றிருந்தது. தொடர்ந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது.













; ?>)
; ?>)
; ?>)