• Sun. Dec 28th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பெற்ற மகனை அரிவாளால் கொடூரமாக வெட்டிக்கொன்ற தந்தை

ByVasanth Siddharthan

Mar 2, 2025

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாணார்பட்டி அருகே காவேரி செட்டியபட்டியை சேர்ந்தவர் முனியாண்டி மகன் ரஞ்சித் (வயது 25) கூலித்தொழிலாளி. இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. இவரது தந்தை முனியாண்டி (வயது 47) என்பவர் தேங்காய் வெட்டும் தொழில் செய்து வருபவர். இவருக்கும் மதுப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு தந்தை மகன் இருவருக்கும் இடையே சேவல் கட்டி வைப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றியதில் முனியாண்டி என்பவர் அவரது மகனான ரஞ்சித்தை தேங்காய் வெட்டும் அரிவாளால் இடதுபுற மார்பில் பலமாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் நிலை குலைந்த ரஞ்சித் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் காயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ரஞ்சித் பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தவர் உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பெற்ற மகனை அரிவாளால் வெட்டி படுகொலை செய்து தப்பி ஓடிய தந்தையை கைது செய்த சாணார்பட்டி போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

பெற்ற மகனை தந்தையே வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.