• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வு நாளை

Byவிஷா

Dec 20, 2024

தமிழகத்தில் கனமழையால் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வுகள் நாளை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்;றி நிலையில், சமீபத்தில் பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ததால் சில மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் அந்தத் தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதாவது 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆங்கில தேர்வும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சில தேர்வுகளும் நடைபெறவில்லை. இந்த தேர்வுகளை நாளை நடத்த வேண்டும் என்று தற்போது பள்ளி கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அதன்படி 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 12ம் தேதி நடைபெற இருந்த அரையாண்டுத் தேர்வு நாளை சனிக்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.