• Fri. Jun 26th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

ஆட்டோ மீது லாரி மோதி விபத்து

Byகாயத்ரி

Nov 12, 2021

அசாம் மாநிலம் கரிம்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர், சத் பூஜை விழாவுக்கு சென்றுவிட்டு ஆேட்டோ ஒன்றில் திரும்பிக் கொண்டிருந்தனர். குழந்தைகள் பெண்கள் உட்பட 10 பேர் அதில் இருந்தனர்.


ஆட்டோ, கரிம்கஞ்ச்- திரிபுரா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பதர்கண்டி என்ற கிராமத்தின் அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது சிமென்ட் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி ஒன்று எதிரே வந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.


இந்த பயங்கர விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த விபத்தில் இறந்தவர்களின் உடல்களை போலீசார் கரீம்கஞ்ச் சிவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.