ஈரோடு – சத்தியமங்கலம் அருகே உள்ள பெரும்பள்ளம் அணைக்கு தண்ணீர் குடிக்க வந்த சுமார் 40 வயதுடைய ஆண் யானை உடல்நலக் குறைவால் அணைப்பகுதிகளில் நடக்க முடியாமல் சோர்வடைந்து படுத்துக்கொண்டது. அந்த யானைக்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தது.