பாஜக வேட்பாளர் பொன்.இராதாகிருஷ்ணன், நாகர்கோவில் 12_வது வார்டுக்கு உட்பட்ட தழுவிய மகாதேவர் கோவில் அருகே அப்பகுதிகளில் உள்ள வீடு, வீடாக வாக்காளர்களை சந்தித்து ‘தாமரை’ க்கு வாக்கு சேகரித்தார்.
அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் கனிம வளங்கள் 2- மாநிலங்கள் வழியாக கொண்டு செல்ல மத்திய அரசு தான் அனுமதி வழங்க முடியும் என்றும், மத்திய அரசின் அனுமதியுடன் தான் கனிம வளங்கள் கொண்டு செல்வதாகவும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் குறிப்பிட்டுள்ளது குறித்து பொன். இராதாகிருஷ்ணன் தெரிவித்தது.
மத்திய அரசின் ஆணை இருப்பதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகிறார். ஆணை இருந்தால் காட்டுங்கள் என கேட்டேன். ஆனால் அதை ஏன் பொது வெளியில் அமைச்சர் காண்பிக்காதது என்.? பொன்னார் கேள்வி எழுப்பினார்.
பணிகள் நிறுத்தம் காரணமாக ரூ.110_கோடி நஷ்ட ஈடு பழைய ஒப்பந்தகாரருக்கு கொடுக்கப்பட்டது. இந்த தகவல்கள் எதுவுமே விஜய் வசந்திற்கு தெரியவில்லை. அமைச்சர் மனோ தங்கராஜ்யின் சொல்லை திருப்பி சொல்லும் கிளி பிள்ளையாக இருக்கிறார் என பொன். இராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினர்.