• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

75ம் ஆண்டு குடியரசு தினவிழாவில் மாணவர்கள் மஞ்சப்பை உறுதிமொழி ஏற்பு…

ByKalamegam Viswanathan

Jan 26, 2024

மதுரை வடக்காவணி துவக்கப்பள்ளியில் 75ம் ஆண்டு குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பள்ளியின் தலைமை ஆசிரியை பிச்சையம்மாள் அவர்கள் தலைமையேற்று தேசிய கொடியினை ஏற்றிவைத்தார். உதவி ஆசிரியை சித்ரா அவர்கள் முன்னிலை வகிக்க சிறப்பு அழைப்பாளராக சமூகசெயற்பாட்டாளர் நான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி மாணவ, மாணவிகளுக்கு குடியரசுதினத்தில் பசுமையை காத்திட மஞ்சப்பை குறித்து எடுத்துரைத்து மஞ்சப்பைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.